Sunday, August 3, 2008

கிறுக்கல் - கடல் வாழ்த்து

அழகிய காலைப் பொழுதினிலே
ஆதவன் மெதுவாய் எழுகையிலே
நீல ஆடை தானுடுத்தி
பொலிவுடன் சிரிக்கிறாள் கடல் அன்னை !

தன்னிடம் வரும் பிள்ளைகளை
அன்புக்கரம் (அலை) தான் நீட்டி
பிள்ளைகள் கவலைகள் தான் மறக்க
பரிவுடன் தொடுகிறாள் கடல் அன்னை !

உப்புத் தண்ணீர் கொண்டாலும்
உள்ளுக்குள் உயிர்களை தாங்கிடுவாள்
அயாரது அடித்திடும் அலைகளின் மூலம்
உழைப்பின் உன்னதம் உணர்த்திடுவாள்

அன்னையின் சிரிப்பொலி கேட்டதுமே
மனதினில் அமைதியும் பிறந்திடுதே
ஆயிரம் கோடி பிள்ளைகள் நெஞ்சத்தை
ஆட்கொண்ட கடல் அன்னை என்றும் வாழியவே !

- புலவர் புன்னாக்குதாசன்

1 comment:

Prasanna said...

Beach Poetry!
Great Man...I love it as i do ever with beach.