அழகிய காலைப் பொழுதினிலே
ஆதவன் மெதுவாய் எழுகையிலே
நீல ஆடை தானுடுத்தி
பொலிவுடன் சிரிக்கிறாள் கடல் அன்னை !
தன்னிடம் வரும் பிள்ளைகளை
அன்புக்கரம் (அலை) தான் நீட்டி
பிள்ளைகள் கவலைகள் தான் மறக்க
பரிவுடன் தொடுகிறாள் கடல் அன்னை !
உப்புத் தண்ணீர் கொண்டாலும்
உள்ளுக்குள் உயிர்களை தாங்கிடுவாள்
அயாரது அடித்திடும் அலைகளின் மூலம்
உழைப்பின் உன்னதம் உணர்த்திடுவாள்
அன்னையின் சிரிப்பொலி கேட்டதுமே
மனதினில் அமைதியும் பிறந்திடுதே
ஆயிரம் கோடி பிள்ளைகள் நெஞ்சத்தை
ஆட்கொண்ட கடல் அன்னை என்றும் வாழியவே !
- புலவர் புன்னாக்குதாசன்
1 comment:
Beach Poetry!
Great Man...I love it as i do ever with beach.
Post a Comment