கற்பனை காதலி
பேருந்தில் என்னுடன் பயணிக்கும் பைங்கிளி
இந்த கோழையின் உள்ளத்தை தாக்கியது உன் விழி !
தாக்குதலின் வலியால் தடம் புரண்டு நின்றேன்
உன் மலர்ப் பாதம் சொல்லும் வழி பின் தொடர்ந்து வந்தேன் !
உன்னை கண்டு விட்ட நாட்களெல்லாம் இனிமையாய் செல்லும்
காணாத நாட்களோ ஈட்டிபோல் கொல்லும்!
நீ பேசினால் கேட்பதோ மகிழ்ச்சி எனும் கீதம்
உன் தினசரி தரிசனம் கிடைத்து விட்டால் போதும் !
என் அன்பின் ஆதங்கம் அறியாப் பெண்ணே
என் விழிகளின் வழ்யினில் என் காதல் அறிவாய் கண்ணே !
- புலவர் புண்ணாக்குதாசன்
1 comment:
karpanaiyil kaadhal...Better
Kadhaalil karpanai...Worse
Post a Comment