Sunday, August 3, 2008

கிறுக்கல் - கற்பனை காதலி - 1

கற்பனை காதலி

பேருந்தில் என்னுடன் பயணிக்கும் பைங்கிளி
இந்த கோழையின் உள்ளத்தை தாக்கியது உன் விழி !

தாக்குதலின் வலியால் தடம் புரண்டு நின்றேன்

உன் மலர்ப் பாதம் சொல்லும் வழி பின் தொடர்ந்து வந்தேன் !

உன்னை கண்டு விட்ட நாட்களெல்லாம் இனிமையாய் செல்லும்
காணாத நாட்களோ ஈட்டிபோல் கொல்லும்!

நீ பேசினால் கேட்பதோ மகிழ்ச்சி எனும் கீதம்
உன் தினசரி தரிசனம் கிடைத்து விட்டால் போதும் !

என் அன்பின் ஆதங்கம் அறியாப் பெண்ணே
என் விழிகளின் வழ்யினில் என் காதல் அறிவாய் கண்ணே !

- புலவர் புண்ணாக்குதாசன்

1 comment:

Prasanna said...

karpanaiyil kaadhal...Better
Kadhaalil karpanai...Worse