அழகிய காலைப் பொழுதினிலே
ஆதவன் மெதுவாய் எழுகையிலே
நீல ஆடை தானுடுத்தி
பொலிவுடன் சிரிக்கிறாள் கடல் அன்னை !
தன்னிடம் வரும் பிள்ளைகளை
அன்புக்கரம் (அலை) தான் நீட்டி
பிள்ளைகள் கவலைகள் தான் மறக்க
பரிவுடன் தொடுகிறாள் கடல் அன்னை !
உப்புத் தண்ணீர் கொண்டாலும்
உள்ளுக்குள் உயிர்களை தாங்கிடுவாள்
அயாரது அடித்திடும் அலைகளின் மூலம்
உழைப்பின் உன்னதம் உணர்த்திடுவாள்
அன்னையின் சிரிப்பொலி கேட்டதுமே
மனதினில் அமைதியும் பிறந்திடுதே
ஆயிரம் கோடி பிள்ளைகள் நெஞ்சத்தை
ஆட்கொண்ட கடல் அன்னை என்றும் வாழியவே !
- புலவர் புன்னாக்குதாசன்
Sunday, August 3, 2008
கிறுக்கல் - கற்பனை காதலி - 1
கற்பனை காதலி
பேருந்தில் என்னுடன் பயணிக்கும் பைங்கிளி
இந்த கோழையின் உள்ளத்தை தாக்கியது உன் விழி !
தாக்குதலின் வலியால் தடம் புரண்டு நின்றேன்
உன் மலர்ப் பாதம் சொல்லும் வழி பின் தொடர்ந்து வந்தேன் !
உன்னை கண்டு விட்ட நாட்களெல்லாம் இனிமையாய் செல்லும்
காணாத நாட்களோ ஈட்டிபோல் கொல்லும்!
நீ பேசினால் கேட்பதோ மகிழ்ச்சி எனும் கீதம்
உன் தினசரி தரிசனம் கிடைத்து விட்டால் போதும் !
என் அன்பின் ஆதங்கம் அறியாப் பெண்ணே
என் விழிகளின் வழ்யினில் என் காதல் அறிவாய் கண்ணே !
- புலவர் புண்ணாக்குதாசன்
Monday, June 16, 2008
கவிதை - காதல் தோல்வி!
என் காதலை சொல்லிட வார்த்தைகள் தேடினேன்
வார்த்தைகள் வரும் முன்னே வட்ட நிலா மறைந்தது !
குழந்தையை போல் சிரித்தாள்
என் உள்ளத்தை சிறை பிடித்தாள்
இன்று சிறகடித்து பறந்தாள் !
அண்டை நாட்டில் அவள் இருந்த போதிலும்
என் மனதருகில் தான் இருந்தாள் என்றிருந்தேன்
இன்று தாய் நாடு திரும்பி சென்றாள்
என் மனம் தண்ணீரில் தத்தளிப்பதை போலுணர்ந்தேன் !
கனவுலகில் கட்டினேன் காதல் கோட்டை
கனவு கலைந்த பின் விழுந்தது நெஞ்சில் ஓர் ஓட்டை !
என் இதய கோவிலின் சிம்மாசனத்தில் இருந்தாள்
இன்று அவள் இறங்கி சென்றதும் என் இதயம்
கோபுரம் இல்லா கோவில் ஆனது !
என் வீட்டில் விளக்கேற்ற வருவாள் என நினைத்தேன்
இன்று எண்ணை இல்லா விளக்குத்திரியாக
என்னை எரிய விட்டு சென்று விட்டாள் !
கருப்பு சட்டைக்காரி காதலுக்கு கெட்டிக்காரி !
என் இரும்பு இதயத்தை துரும்பாக்த துகழ்த்து விட்டாள் !
நீ இம் என்றால் சிந்து கவி பாடுவேன் !
நீ இல்லை என்றால் அடுத்த பெண்ணை தேடுவேன் !
-புலவர் புன்னாக்குதாசன்
வார்த்தைகள் வரும் முன்னே வட்ட நிலா மறைந்தது !
குழந்தையை போல் சிரித்தாள்
என் உள்ளத்தை சிறை பிடித்தாள்
இன்று சிறகடித்து பறந்தாள் !
அண்டை நாட்டில் அவள் இருந்த போதிலும்
என் மனதருகில் தான் இருந்தாள் என்றிருந்தேன்
இன்று தாய் நாடு திரும்பி சென்றாள்
என் மனம் தண்ணீரில் தத்தளிப்பதை போலுணர்ந்தேன் !
கனவுலகில் கட்டினேன் காதல் கோட்டை
கனவு கலைந்த பின் விழுந்தது நெஞ்சில் ஓர் ஓட்டை !
என் இதய கோவிலின் சிம்மாசனத்தில் இருந்தாள்
இன்று அவள் இறங்கி சென்றதும் என் இதயம்
கோபுரம் இல்லா கோவில் ஆனது !
என் வீட்டில் விளக்கேற்ற வருவாள் என நினைத்தேன்
இன்று எண்ணை இல்லா விளக்குத்திரியாக
என்னை எரிய விட்டு சென்று விட்டாள் !
கருப்பு சட்டைக்காரி காதலுக்கு கெட்டிக்காரி !
என் இரும்பு இதயத்தை துரும்பாக்த துகழ்த்து விட்டாள் !
நீ இம் என்றால் சிந்து கவி பாடுவேன் !
நீ இல்லை என்றால் அடுத்த பெண்ணை தேடுவேன் !
-புலவர் புன்னாக்குதாசன்
Sunday, May 25, 2008
முதல் கிறுக்கல்
அன்பு நண்பர்களே,
முதல் நடை முதல் பேச்சு முதல் முத்தம்..அது போல இது என் முதல் கிறுக்கல். நீண்ட நாள் திட்டத்திற்கு பின் இன்று என்னுடைய முதல் கிறுக்கலை தொடங்குகிறேன். என் மனதில் எழும் கோபம் சிரிப்பு ஆதங்கம் அழுகை கவிதை கற்பனை இவைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நீண்ட நாள் தாகம் இன்று முதல் நீங்கும் என்ற நம்பிக்கையில் இதை தொடங்குகிறேன். இதற்க்கு ஊக்கம் அளித்த என் நண்பன் வடிவேலனுக்கு நன்றிகள் பல !
நட்புடன்,
கார்த்திக்.
முதல் நடை முதல் பேச்சு முதல் முத்தம்..அது போல இது என் முதல் கிறுக்கல். நீண்ட நாள் திட்டத்திற்கு பின் இன்று என்னுடைய முதல் கிறுக்கலை தொடங்குகிறேன். என் மனதில் எழும் கோபம் சிரிப்பு ஆதங்கம் அழுகை கவிதை கற்பனை இவைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நீண்ட நாள் தாகம் இன்று முதல் நீங்கும் என்ற நம்பிக்கையில் இதை தொடங்குகிறேன். இதற்க்கு ஊக்கம் அளித்த என் நண்பன் வடிவேலனுக்கு நன்றிகள் பல !
நட்புடன்,
கார்த்திக்.
Subscribe to:
Posts (Atom)